Book For Sale
Tuesday, December 29, 2015
Monday, December 28, 2015
குறிஞ்சிப்பாட்டிலுள்ள 99 வகைப்பூக்கள்
1. காந்தள்
2.ஆம்பல்
3.அனிச்சம்
4.குவளை
5.குறிஞ்சி
6.வெட்சி
7.செங்கோடு வேரி
8.தேமா
9.மணிச்சிகை
10.உந்தூழ்
11.கூவிளம்
12.எறுழம்
13.சுள்ளி
Sunday, December 27, 2015
பதினைந்து அயலினத்தவர்கள் படையெடுத்த இந்தியா
இந்திய இன, மொழிக் கூறுகள்
இந்தியாவில் வாழும் மக்கள் பல்வேறு இனத்தவராகவும், பல்வேறு சமயத்தினராகவும் காணப்படுகின்றனர். நெட்டையாயும், குட்டையாயும், பருத்தும் சிறுத்தும், கறுத்தும், வெளுத்தும் பல்வேறு உடலமைப்புடன் இந்தியர் காணப்படுகின்றனர். சுருங்கக் கூறின், உலகின் பல்வேறு பாகங்களில் தனித்தனியே காணப்படும் மக்களினத்தின் உடற் கூறுபாடுகளை இந்திய மக்களினத்தில் ஒருங்கே காணலாம். எனவே, இந்தியாவை ‘ உலகின் சுருக்கம்’ என்றும், இந்திய மக்களினத்தின் கூட்டினத்தை ‘ மாந்தரினப் பொருட்காட்சி’ என்றும் கூறுவர். இதற்குக் காரணம், நாம் நில வழியாகவும், நீர் வழியாகவும் ஏறத்தாழப் பதினைந்து அயலினத்தவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்ததேயாகும். இவ்வினத்தவருள் பலரும் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கள் ஆட்சியினை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் மொழி, சமயம், பண்பாடு, குருதி முதலியன இந்திய மண்ணில் தோய்ந்து விட்டன.
Wednesday, December 16, 2015
இந்திய ஆட்சிப் பணி - IAS
ஐ.ஏ.எஸ். தேர்வு
எழுதுவதற்கான வழிமுறைகளைக் கீழ்காணும் பதிவிலிருந்து பெறலாம்.
ஐ.ஏ.எஸ். தேர்வில்
விருப்பப் பாடமாக இயற்பியலை எடுக்கலாமா
என்றால் ஐ.ஐ.டி.
போன்ற உயர்தர பொறியியல் கல்வி
பயின்ற மாணவர்கள் அதிக அளவில் இயற்பியலை
விருப்பப் பாடமாகக் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்த
காரணத்தினால் இயற்பியல் பாடத் திட்டம் மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) சற்று கடினமாக்கப்பட்டது. அதனால்
அந்தப் பாடம் சற்று கடினமாகவே
இருக்கும்.
Monday, December 14, 2015
வேதகாலம்
ஆரியர்கள் மத்திய
ஆசியப் பகுதியிலிருந்து, கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள்.கால்நடைகளை
மேய்க்கும் தொழில் செய்த ஆரியர்கள், புதிய புதிய புல்வெளிகளைத் தேடிக்கொண்டு இடம்விட்டு
இடம் பெயர்ந்தனர். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள்,
பின்னர் சில நூற்றாண்டுகளில் வட இந்தியா முழுவதிலும் பரவிக் குடியமர்ந்தனர்.
இந்தியாவில் அவர்கள்
குடியேறிய பகுதி ஆரிய வர்த்தம் எனப்பட்டது. ஆரியர்கள் கால்நடைகளைக் கொண்டு வாழ்வு நடத்தினர்.
தங்கள் இனப்பெரியோர் பாடிய வேண்டுதல்களை வேதங்களாகத் தொகுத்தனர். வரலாற்றில் இக்காலகட்டம்
வேதகாலம் என்று அழைக்கப்படுகிறது.
Thursday, December 10, 2015
2. சிந்துவெளி நாகரிகம்
நாம் வாழும் காலத்தைக் கணினிக்காலம் என்கிறோம்.
மின் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்ட பின் மிகவும் மதிக்கப்படும் கண்டுபிடிப்பாகக் கணினி
உள்ளதால் இது கணினிக்காலம் எனப்படுகிறது.
ஆதி மனிதன் கல்லைப் பயன்படுத்திய காலம் கற்காலம்
எனப்படும்.
மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம்
செம்பு (தாமிரம்).
மனிதன் செம்பு, கல் இரண்டையும் பயன்படுத்திய
காலம் செம்புக்கற்காலம் எனப்படுகிறது.
செம்புகற்காலத்தில் தான், இந்தியாவில் மிகத்
தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான சிந்துவெளி (ஹரப்பா) நாகரிகம் செழித்திருந்தது.
சிந்துவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின்
தொடக்கமாக விளங்குகிறது.
Wednesday, December 9, 2015
வரலாறு – 1
பல
மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது டைனோசரஸ் என்ற பெரிய விலங்கு. அதன் முட்டைகள்
அரியலூர் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச்
சேர்ந்தவை.
நமக்கு
முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துக் கால வரிசைப்படி கூறுவது
வரலாறு ஆகும்.
தமிழ்நாட்டில்
ஆதிச்சநல்லூரில் நூறு ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
கி.பி
2004 இல் அகழ்வாராய்ச்சிப் பணியைத் தொடர்ந்த போது ஒரே இடத்தில் 160க்கும் அதிகமான முதுமக்கள்
தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிற்றிலக்கியம்
சிற்றிலக்கியம்
என்பதைப் பிரபந்தம் என்றும் அழைப்பர். தமிழில் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன என்பர். ‘பதிகம்’ என்பது ஒரு பொருளைக் குறித்துப்
பத்துச் செய்யுள் பாடுவது. ‘சதகம்’ என்பது ஒரு பொருளைக் குறித்து நூறு செய்யுள் பாடுவது.
‘அந்தாதி’ என்பதை அந்தம் ஆதி எனப் பிரிக்கலாம். அந்தம், ஆதியாய்த்
தொடுப்பது அந்தாதியாகும். அஃதாவது ஒரு செய்யுளின் இறுதி எழுத்தோ, அசையோ , சீரோ,
அடியோ அதனைத் தொடர்ந்து வரும் செய்யுளின் முதலாய் அமையும்
வீதியில் ‘உலா’ வரும் இறைவன் அல்லது மன்னன் மீது உலா பாடப்பெறும். உலா வரும்
தலைவனைப் பார்த்து ஏழு வகைப் பருவத்து பெண்கள் சிலர், அவன், மீது
காதல் கொண்டு அவன் சென்ற பின்பும், அவனை
நினைத்துக் காதல் வேட்கையால் வருந்துவதாய் உலா பாடப்பெறும்.
தெய்வத்தையோ
அரசனையோ ஒப்பற்ற பெரியோர் ஒருவரையோ பிள்ளைப் பருவத்தில் வைத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ்
இலக்கியம் ஆகும்.
Saturday, December 5, 2015
சங்க காலம் -1
இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட காலமே சங்க காலமாகும். அன்று தமிழகத்தின் வட எல்லை வேங்கடமாகவும்
தெற்கெல்லை குமரிமுனையாகவும் கிழக்கு மேற்கு எல்லைகள் கடல்களாகவும்
விளங்கின. இவ் எல்லைக்குள் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு,
கொங்கு நாடு எனப் பல நாடுகள் இருந்தன. சேர, சோழ, பாண்டிய நாடுகளை முடி
மன்னர்களும் பிறநாடுகளைக் குறுநில மன்னர்களும் ஆண்டனர்.
மேலும்
பறம்பு மலையைப் பாரியும், பொதிய மலையை ஆய் அண்டிரனும், மலைய நாட்டைத்
திருமுடிக்காரியும், ஒய்மா நாட்டை நல்லியக் கோடனும் ஆகப் பல சிற்றரசர்கள்
தமிழகத்தை ஆங்காங்கு ஆண்டு வந்தனர். மன்னர்களைத் தம் உயிராகவே மக்கள்
கருதினர். தமிழ் மன்னர்கள் அனைவரும் தமிழ் நாட்டைச் சேர்நதவர்கள்.
தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், தாம் தமிழராக இருந்த காரணத்தால் தான்
தமது மொழியினை, தமிழைத் தம் உயிர் போலக் கருதி வந்தனர்.
தம்மொழியில் வல்ல
புலவரையும், பாணரையும், கூத்தரையும் பேணிப் பாதுகாத்தனர். அவர்கள் வாயிலாக
முத்தமிழையும் வளப்படுத்தினர். தமிழக வேந்தர் தம் குடிமக்களின் நல்வாழ்வு
ஒன்றிலேயே கருத்துக் கொண்டவராக, செங்கோல் வழுவாமல் செம்மையாக ஆட்சி
புரிந்தனர். இதனால் தமிழர் வாழ்வு எல்லாத் துறைகளிலும் வளமுற்று விளங்கியது
எனலாம்.
தமிழ் இலக்கியத் தகவல்கள் 1
மொழி
மொழியின்
தோற்றம் ஆய்வுக்கு அப்பாற்பட்டது.
சிவபெருமானின்
உடுக்கையிலிருந்து வடமொழியும் (சமஸ்கிருதம்), தென்மொழியும் (தமிழ்மொழி) பிறந்தன.
வடமொழியைப்
பாணிணிக்குக் கொடுத்தவர் சிவபெருமான்.
தென்மொழியை
அகத்தியருக்குக் கொடுத்தவர் சிவபெருமான்.
இத்தாலி
மொழியை தந்தவர் தாந்தே.
ஆங்கில
மொழியைத் தந்தவர் சாசர்.
ஜெர்மன்
மொழியைத் தந்தவர் லூதர்.
டச்சு
மொழியைத் தந்தவர் கிஸ்டியேர்ன் பெடெர்ஸன்.
மொழியின்
தொடக்கத்தல் இருந்தவை அடிச்சொற்கள் அல்ல. நீண்ட ஒலித்தொடர்களே (வாக்கியங்கள்) ஆகும்.
Subscribe to:
Posts (Atom)
1.எழுத்தியல்
எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன. ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...