இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட காலமே சங்க காலமாகும். அன்று தமிழகத்தின் வட எல்லை வேங்கடமாகவும்
தெற்கெல்லை குமரிமுனையாகவும் கிழக்கு மேற்கு எல்லைகள் கடல்களாகவும்
விளங்கின. இவ் எல்லைக்குள் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு,
கொங்கு நாடு எனப் பல நாடுகள் இருந்தன. சேர, சோழ, பாண்டிய நாடுகளை முடி
மன்னர்களும் பிறநாடுகளைக் குறுநில மன்னர்களும் ஆண்டனர்.
மேலும்
பறம்பு மலையைப் பாரியும், பொதிய மலையை ஆய் அண்டிரனும், மலைய நாட்டைத்
திருமுடிக்காரியும், ஒய்மா நாட்டை நல்லியக் கோடனும் ஆகப் பல சிற்றரசர்கள்
தமிழகத்தை ஆங்காங்கு ஆண்டு வந்தனர். மன்னர்களைத் தம் உயிராகவே மக்கள்
கருதினர். தமிழ் மன்னர்கள் அனைவரும் தமிழ் நாட்டைச் சேர்நதவர்கள்.
தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், தாம் தமிழராக இருந்த காரணத்தால் தான்
தமது மொழியினை, தமிழைத் தம் உயிர் போலக் கருதி வந்தனர்.
தம்மொழியில் வல்ல
புலவரையும், பாணரையும், கூத்தரையும் பேணிப் பாதுகாத்தனர். அவர்கள் வாயிலாக
முத்தமிழையும் வளப்படுத்தினர். தமிழக வேந்தர் தம் குடிமக்களின் நல்வாழ்வு
ஒன்றிலேயே கருத்துக் கொண்டவராக, செங்கோல் வழுவாமல் செம்மையாக ஆட்சி
புரிந்தனர். இதனால் தமிழர் வாழ்வு எல்லாத் துறைகளிலும் வளமுற்று விளங்கியது
எனலாம்.
No comments:
Post a Comment