பாரத
தேசம்
ஆயுதம்
செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல்
செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.
குடைகள்
செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும்
பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.
காவியம்
செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம்
செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்
சாதி
இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியச் சொல் அமிழ்தமென்போம்
நீதி
நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.
பாரதியார்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர். பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று கொண்டாடப்பட்டவர்.
இவர், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே. இந்தப்
பாட்டில்தான் என்னென்ன கனவுகள்? அன்று அவை கனவுகள். இன்று அவை நனவாகி உள்ளன. ‘வெள்ளிப்
பனிமலையின் மீது உலாவுவோம்’ எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி, நம் பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர் வாழ்ந்த காலம் 11.12.1882 முதல் 11.09.1921 வரை.
No comments:
Post a Comment