மனைக்கு
விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத்
தகைசால் புதல்வர்; - மனக்கினிய
காதல்
புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின்
புகழ்சால் உணர்வு.
பாடல்பொருள்
குடும்பத்தின்
விளக்குப் பெண்ணாவாள். அப்பெண்ணுக்கு விளக்கினைப் போன்றவர்கள், அவள் பெற்ற சிறந்த பிள்ளைகள்.
மனத்திற்கினிய அன்புமிக்க அப்பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி. அக்கல்விக்கு
விளக்காக விளங்குவது எதுவென்றால், அவர்களிடம் உள்ள நல்லெண்ணங்களே.
நூலாசிரியரின்
பெயர் விளம்பிநாகனார். விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல்குறிப்பு:
நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கடிகை என்றால் அணிகலன் என்பது
இதன்பொருள். ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களைக் கூறுகின்றது.
No comments:
Post a Comment