Book For Sale
Thursday, August 11, 2016
நான்மணிக்கடிகை
மனைக்கு
விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத்
தகைசால் புதல்வர்; - மனக்கினிய
காதல்
புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின்
புகழ்சால் உணர்வு.
மகாகவி பாரதியார்
பாரத
தேசம்
ஆயுதம்
செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல்
செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.
நாலடியார்
பதினெண்கீழ்கணக்கு
நூல்களுள் ஒன்று நாலடியார். இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துகளைக்
கூறுவது. நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. இந்நூல், சமணமுனிவர்
பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
இராமலிங்க அடிகளார்
இராமலிங்க
அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் கடலூர்
மாவட்டம் மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையா – சின்னம்மையார். ஜீவகாருண்ய ஒழுக்கம்,
மனுமுறை கண்ட வாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா
என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே.
Subscribe to:
Posts (Atom)
1.எழுத்தியல்
எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன. ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...