இராமலிங்க
அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் கடலூர்
மாவட்டம் மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையா – சின்னம்மையார். ஜீவகாருண்ய ஒழுக்கம்,
மனுமுறை கண்ட வாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா
என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே.
அனைத்து
மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு
உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். வாடிய
பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில்,
பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல்,
தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல்
30.01.1874 வரை.
இவரது
திருவருட்பாவிலிருந்து ஒரு பாடல்,வாழ்த்துச் செய்யுளாகத் தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment