திருக்குறளை
இயற்றியவர் திருவள்ளுவர்.
இவருடைய
காலம் கி.மு.31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
இவர்
செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.
நூல்குறிப்பு
இந்நூல்
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
இந்நூலில்
133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள்
உள்ளன. இது பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை
எனவும் கூறுவர். திருக்குறள் உலகப் பொதுமறை எனப்போற்றப்படுகிறது.
திருக்குறளில்
அன்புடைமை, இனியவை கூறல் ஆகிய அதிகாரங்கள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
திருவள்ளுவர்
ஆண்டு கணக்கிடும் முறை
கிறித்து
ஆண்டு (கி.பி.)+31= திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு
: 2013+31 = 2044
(கி.பி.2013
ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)
No comments:
Post a Comment