உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Thursday, August 11, 2016

செந்நாப்போதார்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

இவருடைய காலம் கி.மு.31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.

நூல்குறிப்பு

இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.

இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன. இது பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர். திருக்குறள் உலகப் பொதுமறை எனப்போற்றப்படுகிறது.

திருக்குறளில் அன்புடைமை, இனியவை கூறல் ஆகிய அதிகாரங்கள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை
கிறித்து ஆண்டு (கி.பி.)+31= திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு : 2013+31 = 2044


(கி.பி.2013 ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)

No comments:

Post a Comment

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...